தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் - சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்கு, தடை விதித்தது உச்சநீதிமன்றம்
Feb 21 2018 3:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு வரும் மார்ச் 28 ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக பார் கவுன்சிலின் சிறப்பு நிர்வாகக் குழு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும் - அரசியல் கட்சிகளில் பதவியில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது - கிரிமினல் பின்னணி இருக்கக்கூடாது - வருமானவரி விவரங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை உயர்நீதிமன்றம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.