அம்மாவின் 70 வது பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெறும் அம்மா பேரவையின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் - அம்மாவின் திருவுருவச்சிலையை மாநிலம் முழுவதும் நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
Feb 21 2018 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மாவின் 70 ஆவது பிறந்தநாளை மிகச்சிறப்பான முறையில் கொண்டாடுவது தொடர்பாக சென்னையில் இன்று அம்மா பேரவையின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாவின் திருவுருவ சிலையை 234 தொகுதிகளிலும் அமைப்பது, ஆர்.கே.நகர் தொகுதியில் கழகத்திற்கு மகத்தான வெற்றியை பெற்றுத்தந்த அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மறைந்த முதலைமைச்சர் அம்மாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மா பேரவை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. அம்மா பேரவை செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில், கழக கொள்கை பரப்பு செயலாளர் திரு.தங்கதமிழ்செல்வன், மாவட்டக் கழக செயலாளர்கள் திரு.வெற்றிவேல், திரு.வி. பி. கலைராஜன், திரு. பி. சந்தானகிருஷ்ணன், திரு. ஜி. செந்தமிழன், திரு. திருவேற்காடு சீனிவாசன், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் திரு.கே .சாமி மற்றும் அம்மா பேரவை மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைமைகழக பேச்சாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய கழக செய்தித் தொடர்பாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி, தமிழகம் முழுவதும் குறுகிய காலத்தில் அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் என பெருமிதத்துடன் தெரிவித்தார். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் கழகத்தில் இருப்பதாகவும் கூறினார்.
இக்கூட்டத்தில், மறைந்த முதலைமைச்சர் அம்மாவிற்கு 234 தொகுதியிலும் திருவுருவச்சிலை நிறுவுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் அம்மாவின் 70 ஆவது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாடுவது, ஆர்.கே.நகர் தொகுதியில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு வரலாற்று வெற்றியை வழங்கிய அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பது, மத்திய அரசின் அடிவருடிகளாக செயல்படும் இ.பி.எஸ்-ஒ.பி.எஸ் கூட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.