உயிரிழந்த சிறுவன் உறங்குவதாகக்கூறிய மருத்துவமனை : பாதிக்கப்பட்ட பெற்றோர் - உறவினர்கள் சாலை மறியல்

Feb 22 2018 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

உயிரிழந்த சிறுவன் உறக்கத்தில் இருப்பதாகத் கூறிய மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சி. கல்பட்டியை சேர்ந்தவர்கள் திரு. செந்தில் - திருமதி. திவ்யா தம்பதியர். இவர்களுக்கு பிரகதீஸ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் பிரகதீஸ் மீது சுடுதண்ணீர் கொட்டியுள்ளது.

இதனைக்‍ கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், வையம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரகதீஸை அனுமதித்தனர். இந்தச் சூழலில், ஊசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தை எந்த அசைவுமின்றி இருந்ததால், அதுகுறித்து குழந்தையின் பெற்றோர் செவிலியரிடம் கேட்டுள்ளனர். அதற்கு குழந்தை நன்றாகத் தூங்கிக்‍ கொண்டு இருப்பதாக செவிலியர்கள் பதிலளித்துள்ளனர். ஆனால், நாள் முழுவதும் சிறுவன் உறங்கியதால் சந்தேகம் அடைந்த பெற்றோர், மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து குழந்தை இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00