கோவையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : மர்ம நபர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தால் பரபரப்பு
Mar 21 2018 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில் பா.ஜ.க மாவட்ட தலைவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட தலைவராக பதவி வகித்து வருபவர் திரு. சி.ஆர்.நந்தகுமார். இவரது வீடு கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ளது. அவரது வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது, இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் கார் சேதமடைந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள உமாபதி என்ற பைனான்சியர் வீட்டிலும் மர்ம நபர்கள் சிலர் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்தமுறை பெரியார் சிலை உடைக்கப்பட்டபோது, பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.