கன்னியாகுமரியில் மூதாட்டியை கடலில் வீச முயன்ற இளைஞர்கள் : மனிதாபமற்ற செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்

Mar 22 2018 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பசிக்காக உணவு கேட்டு வந்த மூதாட்டி ஒருவரை, குழந்தை கடத்த வந்ததாக கூறி இளைஞர்கள் சிலர் அவரை கயிற்றால் கட்டி கடலில் இறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தை கடத்தும் வடமாநில கும்பல் ஊடுருவி இருப்பதாகவும், இவர்கள் குழந்தைகள் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, பின்னர் கடத்தலில் ஈடுபடுவதாகவும் வதந்திகள் பரவியது. இதற்கு ஏற்றால் போல், சமீப நாட்களாக கடலோர பகுதிகளில் உள்ள மீனவ கிராமங்களில் குழந்தை திருட வந்ததாக கூறி வடமாநிலத்தவரை குறிவைத்து தாக்கும் சம்பவமும் அரங்கேறியது.

இந்நிலையில், நாகர்கோவிலை அடுத்த மணக்குடி மீனவ கிராமத்தில் மூதாட்டி ஒருவர் பசிக்காக உணவு கேட்டு வீடு வீடாக சென்றுள்ளார். ஆனால், அவர் குழந்தை கடத்த வந்ததாக கூறி, அப்பகுதியை சேர்ந்த மக்கள், மூதாட்டியை மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். மேலும், அங்கிருந்த இளைஞர்கள் சிலர் மூதாட்டியின் கழுத்தில் கயிற்றை கட்டி, கடலில் இறக்கியுள்ளனர்.

பசியால் துடித்த அந்த மூதாட்டி, உயிருக்கு பயந்து கூச்சலிட்டு கதறியுள்ளார். இருப்பினும் மனசாட்சி இல்லாத அந்த கும்பல் அவரை கடலில் கொண்டு வீசினர். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த காட்சி, காண்போரின் மனதை வேதனையடை செய்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00