மத்திய பா.ஜ.க. அரசின் வகுப்புவாத கொள்கையின் ஒரு அடையாளம் தான் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் குற்றச்சாட்டு
Mar 22 2018 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பாஜக அரசின் வகுப்புவாத கொள்கையின் ஒரு அடையாளம் தான், ராம ராஜ்ஜிய ரத யாத்திரை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குற்றச்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில், சில தினங்களுக்கு முன்பு திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. தா. பாண்டியன், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டுமல்ல, அரசியல் ரீதியில் இந்தியாவில் தமிழகம் ஒரு பகுதிதானா, என்பதற்கு பதில் தேடுவோம் என தெரிவித்தார்.
இதனிடையே, நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.