பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்து : 2 பேர் உயிரிழப்பு - படுகாயமடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
Mar 22 2018 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சென்னை திரிசூலத்தை சேர்ந்த செல்வகுமார் மற்றும் கார் ஓட்டுநர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த காயத்ரி என்பவருக்கு பெரம்பலூர் அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மதுபோதையில் சொகுசு கார் ஓட்டி சென்ற நபர், இருசக்கர வாகனங்கள் மீது மோதி, பின்னர் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.