கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா அறிவுறுத்தலின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்" சார்பில், கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் தஞ்சையில்உள்ள திலகர் திடலில் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் - ஏற்பாடுகள் குறித்து கழக முன்னணி நிர்வாகிகள் நேரில் ஆய்வு
Mar 22 2018 2:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க, மத்திய அரசை வலியுறுத்தி கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில் தஞ்சையில் வரும் 25ம் தேதி மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறவுள்ள திலகர் திடலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகளை கழக மூத்த நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மத்திய அரசுக்கு அழுத்தம் தரமுடியாத மக்கள் விரோத எடப்பாடி அரசைக் கண்டித்தும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்ட மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் அமைத்திட வலியுறுத்தியும், தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., தலைமையில் தஞ்சை மாநகரில், வரும் 25-ம் தேதி காலை 8 மணி முதல், மாலை 5 மணி வரை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ள தஞ்சை திலகர் திடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, கழகப் பொருளாளர் திரு.ரெங்கசாமி, தலைமை நிலையச் செயலாளர் திரு.பி.பழனியப்பன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன், கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு.ஜி.செந்தமிழன், கழக அமைப்புச் செயலாளர் திரு.செந்தில் பாலாஜி, தஞ்சை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.சேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திரு.தங்க தமிழ்ச்செல்வன், காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். அணியினர் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தும் போராட்டம் கண்துடைப்பு நாடகம் என்றும், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை திசைதிருப்பும் முயற்சி என்றும் குற்றம் சாட்டினார்.