ஆத்தூரில் உப்புத் தன்மை வாய்ந்த நிலத்தடி நீரை பயன்படுத்தி வருவதால் யானைக்கால் வியாதி, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை
Mar 24 2018 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள கிழக்கு ராஜா பாளையம், லத்து வாடி, திட்டச்சேரி உள்ளிட்ட 5 கிராமங்களும் சேலம், பெரம்பலூர், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த 3 கிராமங்களிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றில் உள்ள நீரை பருகி வருவதோடு, உப்புத் தண்ணீரையே சமையல் செய்வதற்கும், மற்ற உபயோகத்தற்கும் பயன்படுத்தி வருகின்றனர். உப்புத்தன்மை அதிகமுள்ள தண்ணீரை குடிப்பது மட்டுமின்றி அதனை சமையலுக்கும் பயன்படுத்தி வருவதால் யானைக்கால் வியாதி, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று ஏற்பட்டு பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை 40க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் புகார் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இந்த மூன்று கிராமத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிறுநீரகம் பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.