தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாற்று கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரனின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு வரும் ஏராளமான மாற்று கட்சியினர், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த ஏராளமானோர், மாவட்ட கழக செயலாளர் திரு. கே.டி. பச்சைமால் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.
மதுரை, மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர். சாமி முன்னிலையில், கழகத்தில் இணைந்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட மாற்று கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர், வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ். செந்தமிழன் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதேபோல், வேதாரண்யம் அடுத்த கத்திரிபுலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி மற்றும் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த பலர், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சந்திரமோகன் உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, திருச்சியில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கழக பெருளாளர் திரு. ஆர். ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு அழுத்தம் கொடுக்காத எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் வருகிற 21-ம் தேதி திருச்சியில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. இதில் கழக அமைப்பு செயலாளர்கள் திரு. ஆர். மனோகரன், திருமதி. சாருபாலா தொண்டைமான் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஜெ. சீனிவாசன், திரு. ராஜசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றிய கழக அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வருகிற 27-ம் தேதி, மயிலாடுதுறையில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திரளான கழகத்தினர், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்க செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. செந்தமிழன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.