அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் நீர்மோர் பந்தல் திறப்பு
Apr 19 2018 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர்மோர் பந்தல்களை, கழகத்தினர் திறந்து வருகின்றனர்.
கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படிசெயல்படும் துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கோடை வெயிலின் தாக்கத்தில் இருக்கும் பொதுமக்களின் தாகம் தீர்க்க, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நீர்மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஈரோடு புறநகர் மாவட்டம் தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றியம் காசிபாளையம் பேரூராட்சியில், கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. S.R. செல்வம் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்டவைகளை வழங்கினார். கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.