தினத்தந்தி நிறுவனத்தைச் சேர்ந்த ப.சிவந்தி ஆதித்தனின் 5-வது ஆண்டு நினைவு தினம் : கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் வடசென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் வெற்றிவேல் நேரில் மலரஞ்சலி
Apr 19 2018 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தினத்தந்தி நிறுவனத்தைச் சேர்ந்த ப.சிவந்தி ஆதித்தனின் 5வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள இல்லத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில், வடசென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.வெற்றிவேல் நேரில் மலரஞ்சலி செலுத்தினார்.
ப.சிவந்தி ஆதித்தனின் 5வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் வடசென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.வெற்றிவேல் கலந்துகொண்டார்.
கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில், ப.சிவந்தி ஆதித்தனுக்கு மலரஞ்சலி செலுத்தியதாக பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த திரு.வெற்றிவேல், தமிழக அமைச்சர்கள் சிலர் பாலியல் புகாரில் சிக்கியிருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.