தொழிலாளர் தினமான மே தினத்தை கொண்டாடும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 1ம் தேதி மே தின பொதுக்கூட்டங்கள் - திருப்பூரில் நடைபெறும் மே தின பொதுக்கூட்டத்தில் கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று சிறப்புரை
Apr 19 2018 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொழிலாளர் தினமான மே தினத்தை கொண்டாடும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகத்தில் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் மே தின பொதுக்கூட்டங்கள், வரும் 1ம் தேதி நடைபெறும் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும், கழக துணைப்பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் திருப்பூரில் நடைபெறும் மே தின பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், உழைக்கும் தொழிலாளர் வர்க்கம், தன் உரிமைகளை வென்றெடுத்ததை குறிக்கும் திருநாளாம் மே தினத்தை கொண்டாடும் வகையில், "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்" சார்பில் தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் மே தின பொதுக்கூட்டங்கள், வரும் 1ம் தேதி நடைபெறும் என்றும், கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன், திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வருவாய் மாவட்ட தலைநகரங்களில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டங்களுக்கு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, மே தின பொதுக்கூட்டங்களை எழுச்சியோடு நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.