நிலவுக்கு அனுப்பப்படவுள்ள முதல் இந்திய விண்கலம் ரோவர் : அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாசா மூலம் நிலவுக்கு செலுத்த திட்டம்
Apr 19 2018 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக இந்தியா தயாரித்த ரோவர் விண்கலம் அனுப்பப்படவுள்ளதாக இந்திய விஞ்ஞானி ஸ்ரீமதி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்பேஸ் கிட்ஸ் பயிற்சி மைய நிறுவனர் டாக்டர் ஸ்ரீமதி, உலகின் மிக சிறந்த செயற்கைகோளும் நாசாவில் இருந்து ஏவப்பட்ட முதல் இந்திய செயற்கைகோளான கலாம் சாட்டினை ஸ்பேஸ் கிட்ஸ் பயிற்சி மையம் வடிவமைத்தது என்றும் தற்போது ரோவர் என்ற விண்கலத்தை உருவாக்கி வருவதாகவும், இது நிலவில் இருக்கும் பொருட்களைக் கண்டறிய உதவும் என்றும் தெரிவித்தார். இந்த விண்கலம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும் என்றும் ஸ்ரீமதி தெரிவித்தார்.