அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான, பொறுப்பாளர்களின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பட்டியலை, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் துணைப் பொதுச் செயாலளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன், வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர் சேர்க்கை, எழுச்சியோடும், பொதுமக்களின் பேராதரவோடும், கழக உடன்பிறப்புகளின் மிகுந்த உற்சாகத்தோடும் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இப்பணியை ஒருங்கிணைத்திட, தொகுதிவாரியான பொறுப்பாளர்களின் நான்கு பட்டியல்களை திரு. டிடிவி தினகரன் ஏற்கெனவே வெளியிட்டுள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் ஆறாவது பட்டியலை வெளியிட்டுள்ளார்.
ஐந்தாவது பட்டியலில், பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, ஆலங்குடி, மதுரை கிழக்கு மற்றும் வடக்கு, தெற்கு, மத்தியம், மேற்கு, திருப்பரங்குன்றம், பெரியகுளம், கம்பம், காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் உள்ளிட்ட 35 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களின் பெயர்களும், இதர விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
ஆறாவது பட்டியலில், விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர் வடக்கு, திருநெல்வேலி புறநகர் தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு உட்பட்ட 29 தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கைக்கான மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அந்த தொகுதிகளுக்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பகுதிக் கழகங்களுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான பொறுப்பாளர்களின் பெயர்களும், இதர விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, உறுப்பினர் சேர்க்கை பணிகளை சிறந்த முறையில் வெற்றிகரமாக மேற்கொள்ளுமாறும் திரு. டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.