சென்னையில் புதுமுக நடிகை தன்யாவுக்கு கொலை மிரட்டல் : உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி ஆணையரிடம் மனு
May 18 2018 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுமுக நடிகை தன்யா, தனக்கு அடையாளம் தெரியாத நபர்கள் கொலை மிரட்டல் விடுவதால், உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
"போர்களத்தில் ஒரு பூ" என்ற தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தன்யா. அவர் நடிப்பில் உருவான "18-5-2009" என்ற திரைப்படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று, அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக, தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் மனுவில் கூறியுள்ளார். இதனால், தாயுடன் வசித்து வரும் தனக்கு, பாதுகாப்பு அளித்து, மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.