துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க கழகத்தில் புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்
May 19 2018 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, கழகத்தை மென்மேலும் செம்மைப்படுத்தும் வகையில், புதிய உறுப்பினர்களை கழகத்தில் இணைக்கும் நிகழ்ச்சி தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஈரோடு மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், மாணிகம்பாளையத்தில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பருவாச்சி எஸ். பரணீதரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கானோர் கழகத்தில் இணைந்தனர்.
நாகை வடக்கு மாவட்டக் கழக மாணவரணி சார்பில், மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கானோர் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணிச் செலயாளர் திரு. டி.ஆர்.ஜெ. சதீஷ் மற்றும் திரளான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மதுரை மத்திய 1-வது பகுதிக்குட்பட்ட கரிமேடு, ரயில்வேகாலனி, இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்றது. ஏராளமானோர் உறுப்பினர் படிவங்களை பூர்த்தி செய்து தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கழகநிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.