மதசார்பின்மை கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் : திராவிட இயக்கத் தலைவர் வீரமணி பேட்டி
May 19 2018 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதசார்பின்மை கட்சிகள் ஒன்றுசேர வேண்டிய வாய்ப்பை கர்நாடக தேர்தல் உருவாக்கிவிட்டதாக திராவிட இயக்கத் தலைவர் திரு.வீரமணி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மூலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கால் ஊன்ற நினைப்பதாக குறிப்பிட்டார். மூன்றாவது அணியைப் பற்றி சிந்திக்காமல், மதசார்பற்ற கட்சிகள் ஒன்றுசேர்ந்து எதிர்த்தால்தான் இந்த தேசத்தை காப்பாற்ற முடியும் என தெரிவித்தார்.
மதசார்பின்மை கட்சிகள் ஒன்றுசேர வேண்டிய வாய்ப்பை கர்நாடக தேர்தல் உருவாக்கிவிட்டதாக திராவிட இயக்கத் தலைவர் திரு.வீரமணி தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் ஆணையத்திற்கு நடைமுறையில் அதிகாரம் உள்ளதா என்பது அதனை நடைமுறைப்படுத்தும்போதுதான் தெரியும் என்றும் திரு.வீரமணி தெரிவித்துள்ளார்.