ம.தி.மு.க. - நாம் தமிழர் கட்சித் தொண்டர்களிடையே மோதல் - கம்பு மற்றும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டாதால் பரபரப்பு

May 19 2018 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் ஒருவரையொருவர் கம்புகளால் தாக்‍கிக்‍கொண்ட சம்பவத்தால், அங்கு அச்சமும், பரபரப்பு நிலவியது.

கதிராமங்கல போராட்டத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு.வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்தனர். காலை 11 மணி அளவில் விமான நிலையத்தில் வந்திறங்கிய திரு.வைகோவை அவரது கட்சித் தொண்டர்கள், கட்சிக்‍ கொடி ஏந்தி கோஷமிட்டவாறு வரவேற்றனர். அந்த இடத்தில் நாம் தமிழர் கட்சியினரும் நின்றிருந்தனர். வைகோ காரில் ஏறிச் சென்ற நேரத்தில், கோஷமிட்டதால், இரு தரப்பினருக்‍கும் இடையே கடும் வாக்‍குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்‍குவாதம் முற்றிய நிலையில், இரு கட்சித் தொண்டர்களும் தாங்கள் வைத்திருந்த கொடி கம்புகளைக்‍ கொண்டு ஒருவரையொருவர் தாக்‍கிக்‍கொண்டனர்.

இந்த சம்பவத்தின்போது போலீசாரும் தாமதமாக வந்ததால், விமானப் பயணிகளிடையே அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் புகார் செய்ததை அடுத்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00