ஜுன் 11 முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழுக்கூட்டத்தில் முடிவு

May 20 2018 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் ஜீன் 11ம் தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என திருச்சியில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில உயர்மட்டகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த மே-8ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டும், போராட்டத்தின்போது காவல்துறையினர் நடவடிக்கையை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை கலைய வேண்டும், அரசாணை 56ஐ ரத்து செய்யவேண்டும், அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜீன் மாதம் 11ம் தேதி சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும், அன்று முதல் மாவட்ட தலைநகரங்களில் தினந்தோறும் ஆர்ப்பாட்டமும் நடைபெறும் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00