திருவண்ணாமலை மாவட்டத்தில் கழக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் : ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பங்கள் பெற்றனர்
May 20 2018 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற கழக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாங்கால்கூட்டுரோடு, பிரம்மதேசம், பாப்பந்தாங்கல் பகுதிகளில் கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதனை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.சி.ஏழுமலை தொடங்கி வைத்தார். இதில், 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்தனர்.
இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில், கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.எஸ்.ஆர்.தருமலிங்கம், செங்கம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.கே.பாண்டுரங்கன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர், கழகத்தில் புதிய உறுப்பினராக, ஆர்வமுடன் விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.
திருச்சி வடக்கு மாவட்டக்கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் லால்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூவாளூர் ஒன்றியத்தில் நடைபெற்றது. இதில், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவங்களை கழக அமைப்புச் செயலாளரும், வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான திரு.ஆர்.மனோகரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.