21-ம் தேதிக்குள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட எச்சரிக்கை : 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
May 20 2018 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் வரும் 22ம் தேதியுடன் நூறாவது நாளை எட்டுகிறது. எனவே 21ம் தேதிக்குள் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என எழுத்துப் பூர்வமாக தெரிவிக்காவிட்டால் 22ம் தேதி முற்றுகைப் போராட்டம் நிச்சயம் நடைபெறும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடைபெற்று வரும் 18 கிராம மக்களின் போராட்டம் வரும் 22ம் தேதியுடன் 100வது நாளை எட்டுகிறது. இந்நிலையில் வரும் 21ம் தேதிக்குள் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் 22ம் தேதி பொதுமக்கள் பெருந்திரளாக திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் வரும் 21ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.