பாரதிய ஜனதா கட்சியின் குதிரை பேர அரசியலுக்கு உச்சநீதிமன்றம் முற்றுபுள்ளி வைத்தது வரவேற்கத்தக்கது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேட்டி
May 20 2018 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரதிய ஜனதா கட்சியின் குதிரை பேர அரசியலுக்கு உச்சநீதிமன்றம் முற்றுபுள்ளி வைத்தது வரவேற்கத்தக்கது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு.வைகோ தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் திருமானூரில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திரு.வைகோ, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடக அரசியல் விவகாரத்தில் பா.ஜ.க. குதிரைபேர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அதனை தடுத்துவிட்டதாகவும், இதன் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.