காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரில் உள்ள சுவர்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் எழுதப்பட்டுள்ள சின்னம்மா மற்றும் டிடிவி தினகரன் பெயர்களை நீக்கக் கோரி காவல்துறையினர் மிரட்டல்
Jun 23 2018 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரில் உள்ள சுவர்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் எழுதப்பட்டுள்ள, கழக பொதுச்செயலாளர் சின்னம்மா மற்றும் துணைப்பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பெயர்களை நீக்கக் கோரி காவல்துறையினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரில் உள்ள G.S.T சாலையில் அம்மா முன்னேற்றக் கழகம் சார்பாக, கழக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ ஆகியோரின் பெயர்கள், அங்குள்ள சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. இதனிடையே, சுவற்றில் எழுதப்பட்ட பெயர்களை அழித்து விடுமாறு பரங்கிமலை ஆய்வாளர் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து சுவரிலும் ஓ.பி.ஸ் மற்றும் இ.பி.ஸ் ஆகியோரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அரசின் தூண்டுதல் பேரில், பரங்கிமலை ஆய்வாளர் மிரட்டல் விடுத்து சுவர்களில் உள்ள பெயர்களை அழிக்க மிரட்டல் விடுப்பதாக கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.