ஆங்கிலேயர் காலத்தில் இருந்த கருத்துரிமை, தற்போதைய காலகட்டத்தில் எழுத்தாளர்களுக்கு இந்த மண்ணில் உண்டா? : முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து கேள்வி
Jun 23 2018 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆங்கிலேயர் காலத்தில் இருந்த கருத்துரிமை, தற்போதைய காலகட்டத்தில் எழுத்தாளர்களுக்கு இந்த மண்ணில் உண்டா என புதுச்சேரியில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள சங்க 14 வது மாநில மாநாட்டின் கருத்துரிமை கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, தமிழனுக்கு கருத்துரிமை பிறப்புரிமை என கருத கூடாதா என கேள்வி எழுப்பினர். மேலும், ஆளும் அரசை எதிர்த்து கேள்வி எழுப்பக் கூடாதா என்றும் அவர் கேட்டுள்ளார்.