தமிழகத்தில் நிர்வாகம் முற்றிலுமாக சீர்குலைந்து ஊழல் தலைவிரித்தாடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு
Jun 23 2018 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய-மாநில அரசுகளின் கொள்கைகளையும், திட்டங்களையும் யாரும் விமர்சிக்கக்கூடாது என்ற மிகக்கடுமையான அடக்குமுறைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். சேலம் - சென்னை சாலை திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தெரிவித்த திரு. முத்தரசன், தமிழகத்தில் நிர்வாகமே செயல்படவில்லை என்றும் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் குற்றம் சாட்டினார்.