தூத்துக்குடி அருகே விவசாய நிலத்தில் தனியார் காற்றாலைகள் அமைக்க திட்டம் : எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உள்ளிட்ட கிராம மக்களைத் தாக்கி, போலீசார் கைது செய்ததால் பதற்றம்
Jun 23 2018 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி அருகே விவசாய நிலத்தில் தனியார் காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உள்ளிட்ட கிராம மக்களை போலீசார் தாக்கி கைது செய்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நிலவிய பதற்றம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி அருகே உள்ள வடக்குசிலுக்கன்பட்டி கிராமத்தில் விவசாயிகளின் விளைநிலங்களில் தனியார் காற்றாலை நிறுவனம் காற்றாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த 5 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் தாக்கி கைது செய்துள்ளனர். இதனால் வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.