மதுரையில் கட்டிய சில நாட்களிலேயே இடிந்துவிழுந்த நடைபாலம் - எடப்பாடி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் மக்கள் சிரமம் - கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம்
Jun 23 2018 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் கட்டி சில நாட்களே ஆன நடைபாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அலட்சியமாக செயல்படும் எடப்பாடி நிர்வாகத்திற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை புதூர் ராமநாதன் 6வது தெரு பகுதியில் நடைபாலம் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்தப் பாலம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், சென்ட்ரல் மார்க்கெட், அரசு தொழிற்பேட்டை, பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை இணைக்கும் பாலமாக அமைக்கப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தப் பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
2 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்லவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இப்பிரச்சனையை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ள மதுரை மக்கள், எடப்பாடி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாநகரில் முக்கிய இடத்தில் நடைபாலம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்டுள்ள சிரமத்தை அரசு உணர்ந்து அதை சரிசெய்து தரவேண்டுமென புதூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.