சென்னை - சேலம் பசுமை சாலை பிரச்சனை தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனையைப் போல் மாறிவிடக்கூடாது என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை - சொந்த மாவட்ட மக்களையே முதலமைச்சர் வஞ்சிக்காமல் தீர்வுகாணவேண்டும் என்றும் வலியுறுத்தல்
Jun 23 2018 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கழக துணை பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ, சேலம் பசுமை வழிச்சாலைக்கு விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், சொந்த மாவட்ட மக்களை முதலமைச்சர் சந்தித்து பேசித்தான் தீர்வு காண வேண்டும் என்றும், தூத்துக்குடி பிரச்சனை போல இதை கையாளக்கூடாது என்று தெரிவித்த அவர், பேயாட்டம் போடும் இந்த அரசு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.