பசுமை வழிச்சாலைக்‍கு எதிர்ப்பு தெரிவிப்போரை கைது செய்து, அடக்‍குமுறையைக்‍ கையாளும் எடப்பாடி பழனிசாமி அரசு : தொல் திருமாவளவன் கடும் கண்டனம்

Jun 23 2018 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளை அழித்து பசுமை வழிச்சாலை அமைக்‍கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது, எடப்பாடி பழனிசாமி அரசு கைது நடவடிக்‍கையில் ஈடுபட்டு, அடக்‍குமுறையைக்‍ கையாளுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வசித்துவரும் பழங்குடியின, இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்‍களுக்‍கு சாதிச் சான்றிதழ் வழங்காத மாவட்ட நிர்வாகத்தைக்‍ கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பழங்குடியின இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்‍கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழங்குடியின இருளர் மக்‍களுக்‍கு, எளிதில் சாதிச் சான்றிதழ் கிடைக்‍க தமிழக அரசு நடவடிக்‍கை எடுக்‍கவேண்டும் என கேட்டுக்‍கொண்டார். மேலும், சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை அமைக்‍கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது, எடப்பாடி பழனிசாமி அரசு கைது நடவடிக்‍கையில் ஈடுபட்டு, அடக்‍குமுறையைக்‍ கையாளுவதாக குற்றம்சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00