தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு மீனவ கிராமங்களை தனி கிராமப் பஞ்சாயத்தாக அறிவிக்கக்கோரிய வழக்கு : ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Jul 13 2018 6:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு, மீனவ கிராமங்களை தனி கிராமப் பஞ்சாயத்தாக அறிவிக்கக்கோரிய வழக்கில், ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் பாதுகாப்பு சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், மீனவர்களை தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் வகுப்பில் சேர்த்து அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியைத் தனி தொகுதியாக வரையறை செய்யவும், மீனவ கிராமங்களைத் தனிக் கிராமப் பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என மண்டல் கமிஷன் கடந்த 1980 ஆம் ஆண்டு பரிந்துரைத்துள்ளது. மண்டல் கமிஷன் பரிந்துரைர்படி மீனவ கிராமங்களை கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என கொடுத்த மனு மீது நடவடிக்கை இல்லை. எனவே, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு, மீனவ கிராமங்களை தனி கிராமப் பஞ்சாயத்தாக அறிவிக்கக் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சிவஞானம், நீதிபதி பவானிசுப்புராயன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது, இந்த மனு குறித்து வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் மறு வரையரை குழு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00