மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு - நீர்மட்டம் 80 அடியை நெருங்குவதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
Jul 14 2018 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை அணைக்கு விநாடிக்கு 46,613 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள முக்கிய அணைகள் நிரம்புயுள்ளன. அணையின் பாதுகாப்பை கருதி அவற்றிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அவ்வாறு திறந்துவிடப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருவதால் அணையின் நீரமட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை அணைக்கு விநாடிக்கு 46,613 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 79.45 அடியாக அணையிலிருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் குடிநீருக்காக திறந்துவிடப்படுகிறது.