நாகை மீனவர்கள் மீது ஆந்திர மீனவர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் - மீனவர் நலனில் மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என குற்றச்சாட்டு
Jul 14 2018 2:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மீனவர்கள் மீது ஆந்திர மீனவர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழக மீனவர்கள் மீது மத்திய-மாநில அரசுகள் அக்கறை செலுத்தாததால் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருவதாகவும்,
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.