இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 23ம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் : தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை
Jul 14 2018 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 23ம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 23ம் தேதி சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி சேலத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், தூத்துக்குடி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.