வருமானவரி கணக்கை இம்மாதம் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் - தவறினால் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை அறிவிப்பு
Jul 14 2018 2:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2018-19 -ஆம் ஆண்டுக்கான வருமானவரியை ஜூலை 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த நேரிடும் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
வருமானவரி தாக்கல் செய்துவது குறித்து வருமானவரித்துறை தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது.
2018-19-ஆம் ஆண்டுக்கான வருமானவரியை ஜூலை 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய தவறினால், அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ளவர்களுக்கு அபராதம் ஆயிரம் ரூபாயும், 5 லட்சம் ரூபாய்க்குமேல் உள்ளவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வரும் 31.03.2019-க்கு பிறகு வருமானவரி கணக்கை தாக்கல் செய்யமுடியாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வருமானவரி செலுத்துவோரின் வசதிக்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் சிறப்பு கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளது.