திண்டுக்கல் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சிறுமலையில் மலைவாழ் மக்களுக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது - சிறுவா் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பயன் பெற்றனா்
Jul 14 2018 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சிறுமலையில், மலைவாழ் மக்களுக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சிறுமலையில் உள்ள தனியார் பள்ளியில், மலைவாழ் மக்களுக்கான பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொது மருத்துவம், கண் மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், சா்க்கரை நோய் கண்டறிதல், ஈ.சி.ஜி., குழந்தைகள் நல மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கான இலவச பரிசோதனை மற்றும் இலவசமாக மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் உயா் சிகிச்சைக்கான பரிந்துரைகளும் வழங்கப்பட்டது. இதில் சிறுவா் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.
மாவட்ட மருத்துவா் அணிச் செயலாளா் டாக்டா் சாம் இளங்கோ தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமை, கழக கொள்கை பரப்புச் செயலாளா் திரு. தங்க தமிழ்ச்செல்வன், மாநில மருத்துவ அணித் தலைவா் டாக்டர் கதிர்காமு ஆகியோர் தொடங்கி வைத்தனா்.
திண்டுக்கல் மாநகா் மாவட்டச் செயலாளா் திரு. ராமுத்தேவா், ஒன்றியச் செயலாளா் திரு.கருணாகரன், மதுரை மாவட்ட மருத்துவ அணிச் செயலாளா் டாக்டா் சந்திரமோகன், திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொருளாளா் காதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முகாமில் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சானிடெரி நாப்கின்கள் தயாரிக்கும் இயந்திரம் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.