கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் ஆலோசனைப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிக்குளம், சிறு வயலூர், கண்ணப்பாடி, தேனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கழக கொடியேற்று விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ்.கார்த்திகேயன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், கழக அமைப்பு செயலாளருமான பண்ணை வயல் திரு. பாஸ்கரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கழக நிர்வாகிகள் பெரும் திரளாக இதில் கலந்து கொண்டனர். பின்னர் இரண்டாம் கட்டமாக உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் சார்பில் சத்திரக்குடியில், கழக உறுப்பினர் சேர்ப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பரமக்குடி தொகுதிக்கான உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் புதுக்கோட்டை திரு. சுப்பிரமணியன், மாவட்ட கழக செயலளார் திரு. வ.து.ந.ஆனந்த், கழக மருத்துவஅணி செயலாளர் டாக்டர் முத்தையா எம்.எல்.ஏ. உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். இந்தக்கூட்டத்தில், எடப்பாடி அணி, திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து ஏராளமானோர் விலகி, கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
கடலூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கடலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கடலூர் தெற்கு ஒன்றியம் செயலாளர் திரு. G.S.செந்தில்குமார், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. வி.டி.கலைச்செல்வன் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தின்போது, பல்வேறு கிளைகளுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வழங்கப்பட்டது. புதுச்சேரி மாநில செயலாளர் திரு. பா.வேல்முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
கடலூர் மேற்கு மாவட்டம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில், குமராட்சி மேற்கு ஒன்றியம் மற்றும் லால்பேட்டை பேரூராட்சி சார்பாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. K.S.K.பாலமுருகன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு. A.K.சுரேஷ் ஆகியோரிடம், குமராட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.மில்லர், லால்பேட்டை பேரூராட்சி செயலாளர் திரு. நுருல்லா ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், பெருந்திரளாண கழக தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், ஆத்தூரில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தெற்கு மாவட்ட செயலாளர் திரு. ஹென்றிதாமஸ் மற்றும் ஒன்றிய செயலாளர் திரு.சேக்தாவூத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.