காமராஜர் பிறந்தநாளை கொண்டாடுவதில் காங்கிரஸ் - பா.ஜ.க இடையே நடைபெற்ற குடுமிபிடி சண்டை - மத்திய அமைச்சர் முன்னிலையில் அரங்கேறிய அவலம்
Jul 15 2018 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக காங்கிரஸ், பா.ஜ.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
சேலத்தில் உள்ள ஆனந்தா பாலம் அருகே அமைந்துள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு இன்று அரசியல் கட்சியினர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அங்கு வருகை தர இருந்ததையொட்டி பா.ஜ.க.வினர் அங்கு அதிக அளவில் திரண்டிருந்தனர். அப்போது, காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவிக்க வந்தபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அந்த மோதல் கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் கடும் வார்த்தைகளை பயன்படுத்தி குற்றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.