சென்னை பல்லாவரத்தில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி 500-க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டம்
Jul 15 2018 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லாவரம் அடுத்த பம்மல் நகராட்சி நிர்வாகம், முறைகேடாக நடைபெறும் கிரஷர்களை மூடவேண்டும், ஒ.எஸ்.ஆர் நிலங்களை மீட்க வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், ஆக்கிரமிப்புள்ள சாலைகளை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று முழக்கம் எழுப்பினர்.
பெரம்பலூரில், திட்டமிடாத கழிவு நீர் வடிக்கால் கால்வாய் கட்டும் பணியை தடுத்து நிறுத்தகோரி, மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.