தேனியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களின் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் அறிவியல் கண்காட்சி
Aug 14 2018 4:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களின் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள, மேலச்சிந்தலைச் சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களின் கண்காட்சி நடைபெற்றது.இதில் அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் விதமாகவும் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த கண்காட்சி நடைபெற்றது.
இதில், மாணவ மாணவியர்களின் எரிமலை வெடித்தல், களை எடுக்கும்
இயந்திரம், வளிமண்டல அழுத்தம், பசுமை குடில் மூலம் வேளாண்மை கழிவுகளை மேலாண்மை செய்தல் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருந்தனர்.
அதை பற்றிய செயல்முறை விளக்கத்தையும் பார்வையாளர்களுக்கு மாணவ மாணவியர்கள் விளக்கி கூறினர். குறிப்பாக எரிமலை உருவாகும் விதம்
பற்றியும் எரிபொருள் மின்சாரம் இன்றி சூரியதகடுகள் மூலம் களை எடுக்கும் இயந்திரம் இடம் பெற்றிருந்தது அனைவரையும் கவர்ந்தது.