தூத்துக்குடியில் கூட்டுறவு சங்கத்தேர்தல் : இபிஎஸ், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் மோதல் - வன்முறை வெடித்து தேர்தல் ரத்து
Aug 14 2018 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் கூட்டுறவு சங்கத்தேர்தலில் போட்டியிடும் இபிஎஸ், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் மோதலில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கித் தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோஷ்டியினர் ஒரு பிரிவாகவும், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதனின் கோஷ்டியினர் மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டனர்.
இந்நிலையில், தேர்தல் அதிகாரி, அமைச்சருக்கு ஆதரவாக, ஏராளமான வேட்பாளர்களின் மனுக்களை நிராகரித்தும், வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டார். இதனால், ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியிலேயே மோதல் வெடித்தது. வன்முறை வெடிக்கும் சூழல் ஏற்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.