பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் - சம்பவம் குறித்து எடுத்துரைக்க கனடா ஆராய்ச்சி மாணவி ஷோபியாவுக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்
Sep 19 2018 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி விமானத்தில், தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜனுடன் வாக்குவாதம் செய்தது தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க ஆராய்ச்சி மாணவி ஷோபியாவை மாநில மனித உரிமை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னையில் இருந்து கடந்த 3-ம் தேதி, தூத்துக்குடி வந்த விமானத்தில், தமிழக பாரதிய ஜனதா தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜனுடன் வாக்குவாதம் செய்ததால், ஷோபியாவை போலீசார் கைது செய்தனர். ஆனால், தனது மகளை போலீசார் கைது செய்து 8 மணி நேரம் துன்புறுத்தியதாகவும், அவருக்கு பாரதிய ஜனதாவினர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, ஷோபியாவின் தந்தை சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த, ஷோபியாவின் தந்தையும், ஷோபியாவும் வரும் 24-ம் தேதி, திருநெல்வேலியில் நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராக வேண்டும் என, மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.