பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல்துறையினர் திடீர் சோதனை - அறை அறையாகச் சென்று 100க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வு
Sep 19 2018 1:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னை புழல் சிறைச்சாலையில் கைதிகள் வசதியாக இருந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சிறைச்சாலைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில், உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில் இரண்டு ஆய்வாளர்கள் உள்பட 100 போலீசார், சுமார் 2 மணி நேரம் சிறைச்சாலையில் உள்ள அனைத்து அறைகளிலும் தீவிரமாக சோதனை நடத்தினர். இந்த சிறைச்சாலையில், ஆயுள்தண்டனை கைதி, விசாரணை கைதி என ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
முன்னதாக மதுரை சிறைத்துறை துணைத் தலைவர் திரு. பழனி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, மதுரை, பாளையங்கோட்டை சிறைச்சாலைகளில் விரைவில் சோதனை நடைபெறும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.