ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் - வரும் 4-ம் தேதி, கோட்டையை நோக்கி முற்றுகையிடப் போவதாக சி.ஐ.டி.யூ., எ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
Sep 19 2018 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் வரும் 4-ம் தேதி, கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்கங்கள் அறிவித்துள்ளன.
சென்னை பல்லவன் இல்லம் முன்பு தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் தங்களின் கோரிக்கை விளக்க வாயில்கூட்டம் நடத்தினர்.
டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் அரசு அறிவித்தபடி டீசலுக்கான மானிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மின்துறையைப் போன்று போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை அரசே முழுமையாக ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 4-ம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.