மதுரையில் பா.ஜ.கவின் ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் : அறநிலையத்துறை, அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
Sep 19 2018 1:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் பா.ஜ.கவின் ஹெச்.ராஜாவை கண்டித்து அறநிலையத்துறை மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், அதிகாரிகளின் குடும்பத்தினரை இழிவுபடுத்தும் வகையில் ஹெச்.ராஜா பேசியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து மதுரை மாவட்ட அறநிலையத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஹெச்.ராஜாவிற்கு எதிராகவும், அவரை கைது செய்யாத தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. ஹெச்.ராஜாவை கைது செய்யாவிடில் தமிழகம் முழுவதிலும் போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோல், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அறநிலைய துறையைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் ஊழியர்கள், அவதூறாக பேசிய ஹெஜ்.ராஜாவை உடனடியாக கைது செய்யக்கோரி, பணியை புறக்கணித்து ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.