திருச்சியில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்யாமல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சம்பவம் : பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி
Sep 19 2018 2:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ் அதிகாரியை, பணியிடை நீக்கம் செய்யாமல், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதி போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சீராளன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையின்போது, வெளிமாநில லாரி ஒட்டுனர்களை மிரட்டி லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சி, வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்யாமல், அவரை காப்பாற்றும் நோக்கில், ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப்பட்டுள்ளார்.