கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
Sep 19 2018 2:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கட்டாய ஹெல்மெட் தொடர்பான சட்டத்தை தமிழக அரசு உரிய முறையில் நடைமுறைபடுத்தவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கட்டாய ஹெல்மெட் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் திரு. மணிகுமார், திரு. சுப்பிரமணி பிரசாத் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுக்கு நீதிபதிகள் சராமாரியான கேள்விகளை எழுப்பினர். கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு உரிய முறையில் நடைமுறை படுத்தவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இச்சட்டத்தை அரசு அதிகாரிகள் கூட பின்பற்றுவதில்லை என்றும் தெரிவித்தனர். அரசு கொண்டு வரும் சட்டங்களை அரசே செயல்படுத்துவதில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.