ஈரோட்டில் பட்டாசு வெடி விபத்தில் வீடுகள் சேதம்-உரிமையாளர்கள் வேதனை : ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கிய எடப்பாடி அணி எம்.எல்.ஏக்கள்
Sep 19 2018 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோட்டில் பட்டாசு வெடித்த விபத்தில் சேதமடைந்த வீடுகளை செப்பணிட எடப்பாடி அணி எம்.எல்.ஏக்கள் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியதால் வீட்டின் உரிமையாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.
ஈரோடு அருகே உள்ள சாஸ்திரி நகர் பிள்ளையார் கோவில் வீதியில் கடந்த 12 ந்தேதி பட்டாசு மூட்டைகளை இறக்கி சேமிக்க வைத்த போது வெடித்து சிதறியது. இதில் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன. வீடுகளை செப்பனிட 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில் எடப்படி அணி எம்.எல்.ஏக்கள் திரு. கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் தங்கள் தரப்பை சேர்ந்த 3 நபர்களுக்கு மட்டும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கியதோடு, மீதமுள்ள 10 வீடுகளின் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளனர். இதனால் வீட்டின் உரிமையாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.