பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கமான வேண்டுகோள்
Sep 21 2018 11:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேரறிவாளனின் தாயார் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் தாயார் திருமதி. அற்புதம்மாள் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையிலும் இப்பிரச்னையில் தமிழக ஆளுநர் விரைந்து நல்ல முடிவு எடுக்கவேண்டும் என அவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.