தேனியில் புதர் மண்டிப்போன முத்தமிழ் பூங்கா - சமூக விரோதிகளின் புகலிடமாக திகழும் அவலம் : சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Sep 21 2018 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மக்கள் வரிப்பணத்தில் உருவான முத்தமிழ் பூங்கா சமூக விரோதிகளின் புகலிடமாக விளங்குகிறது. அதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் முத்தமிழ் பூங்காவில், சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்கள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இருந்தன. மேலும் பொதுமக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்த பூங்கா, கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இன்றி புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி சமூக விரோத செயல்களின் புகலிடமாக மாறிவிட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.